நித்தியக்கடன் ஜூலை 31 2025

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஜூலை 31 


🥏🔥🥏🔥🥏🔥🥏🔥🥏🔥🥏


🪻 இன்றைய நித்தியக்கடன்


🪻 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🪻 இன்றைய சாதகம் 


🪻 வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.


🪻 இன்றைய நற்சிந்தனை 


🪻 புலன்களின் பால் ஈர்க்கப்பட்டு மயக்க உணர்ச்சி மிகுதியின் காரணமாக, நாம் நம்முடைய நிலையை மறந்து உணர்ச்சி வயப்பட்ட நிலையில் எடுக்கும் முடிவுகள், சுயநலம் மிக்கதாகவும் சந்தர்ப்ப சூழ்நிலைகளின் தூண்டுதலாகவும், மற்றவர்களுடைய நலனை பெரிதாக எண்ணிப் பார்க்காமல் தனக்காகவும், தன்னுடைய தேவைக்காகவும் நியாயமற்ற முறைகளில் அவைகளை நிறைவேற்றிக் கொள்ள தூண்டும். பெரும்பாலும் இந்நிலையில் எடுக்கப்படும் முடிவுகள் நடைமுறைக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.


🪻 இன்றைய தற்சோதனன

 

🪻 உணர்வுபூர்வமாக வைராக்கியத்தோடு எடுக்கும் முடிவுகள் ஆராய்ச்சியோடு சிந்தித்து எடுக்கப்பட்டதாகவும், பொது நலமுடையதாகவும், மற்றவர்களுக்கும், எல்லா வழிமுறைகளிலும் நலம் தருவதாகவும், அவைகளை செயல்படுத்தும் போது சில பல இடர்பாடுகள் வந்தாலும் அவைகளை நியாயமான முறையில் தவிர்க்க முயற்சி செய்வோம். பிறரைப் பற்றியும் தன்னைப் பற்றியும் சிந்தித்து வைராக்கியத்தோடு எடுக்கப்படும் முடிவுகள் தான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அடித்தளமாக அமையும்.


🪻 இன்றைய பண்புப்பயிற்சி


🪻 காலநிலை மாற்றங்கள் எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நம்மை திசை திருப்ப முயற்சி செய்யலாம் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் அமையலாம். இவைகளை எல்லாம் தாண்டி தன்னை முழு மனிதனாக தனக்குள் நிலைநிறுத்திக் கொண்டும் உயர்த்திக் கொண்டும் பயிற்சி முறைகளால் மேலும் மேலும் முயற்சிகளை மேற்கொண்டும் உணர்வுபூர்வமாக வைராக்கித்தோடு வாழும் பண்பில் உயர்வோம். வாழ்க வளமுடன்...          

          

🪻 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🪻 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸


Comments