நித்தியக்கடன் மார்ச் 02 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மார்ச் 02


💢🕳️💢🕳️💢🕳️💢🕳️💢🕳️💢


🔰 இன்றைய நித்தியக்கடன்


🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🔰 இன்றைய சாதகம்


🔰 சனிக்கிழமை 

காலை:- சாந்தி தவம் 

மாலை:- நித்தியானந்ததவம்.


🔰 இன்றைய நற்சிந்தனை


🔰 எந்த நிலையிலிருந்து ஒரு செயல் செய்யப்படுகிறதோ அந்த நிலையினுடைய தன்மையாவும்

அந்த செயலில் நிறைந்திருக்கும். உதாரணத்திற்கு பொதுவாக இருந்து ஒரு நிகழ்ச்சியை ஆய்வு செய்வதற்கும், அதுவாகவே இருந்து அந்த நிகழ்ச்சியை ஆய்வு செய்வதற்கும் வேறுபாடு இருக்கிறது. மனம் நின்று மனதை உணர்வதற்கும், உயிராக நின்று மனதை உணர்வதற்கும் வேறுபாடு உண்டு. இறைவனாய் நின்று இறைவனை உணரும் ஞான நெறி வாழ்க்கைக்கு நம்மை உயர்த்திக் கொள்வோம்.


🔰 இன்றைய தற்சோதனை


🔰 சிறுதுளியே பெருவெள்ளம். அன்றாட கடமைகளில் நம்முடைய உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இக்கடமையை நிறைவாக செய்து கொண்டே அதற்கான அனுபவப் பதிவுகளை கருமையத்தில் உயிரில் பதிவுசெய்து, சிறுக சிறுக நிதானமாக முன்னேற்றம் காண்போம். ஆன்மீகத்தில் பொறுமை என்பது மிகவும் அவசியமாகும். கடமை செய்வதற்கு மட்டுமே நமக்கு உரிமை உண்டு  செய்த செயலினுடைய விளைவை எதிர்பார்ப்பதும், இப்படி நடைபெறவேண்டும் என்று நினைப்பதற்கும், நமக்கு உரிமை கிடையாது.


🔰 இன்றைய பண்புப்பயிற்சி


🔰 உடலிலும், மனதிலும், உயிரிலும், பிரபஞ்சத்திலும், சமுதாய நிலைகளிலும் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகளில் அத்தனையும் அப்படியே உள்ளதை உள்ளவாறு ஏற்றுக் கொள்ள பழகுவோம். இந்த பண்பு ஒன்று, நமக்குள் இருக்கும் ஞானத்தை மலர வைக்கக் கூடியதாகும். புதிய புதிய ஆய்வுகள் நமக்குள் உருவாகும். நம்முடைய வாழ்க்கையினுடைய இன்னொரு பகுதியும் நமக்கு அனுபவமாகும். செயல் விளைவு நீதியின் அடிப்படையில் அனைத்து இயக்க அருட்பேராற்றல், இச்செயல்களை நிதானமாக நடத்திக் கொண்டு வருகிறது. வாழ்க வளமுடன்...


🔰 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔰 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments