வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
டிசம்பர் 06
🏮⏺️🏮⏺️🏮⏺️🏮⏺️🏮⏺️🏮
♻️ இன்றைய நித்தியக்கடன்
♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
♻️ இன்றைய சாதகம்
♻️ புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
♻️ இன்றைய நற்சிந்தனை
♻️ உயிருக்கான ஒரு வலுவான ஆற்றலையும் இயக்கத்தையும், நாம் பயிற்சியின் மூலமாக உருவாக்கி மனதால், அதனோடு இணைந்து அன்றாட வாழ்க்கையின் பல பிரிவுகளில் இதன் மூலமாக கிடைக்கும் அறிவை பயன்படுத்த வேண்டும். இந்த முறையில் நம்முடைய வாழ்க்கையை நித்தம் நித்தம் வாழும்போது சிரமங்களும் சிக்கல்களும், படிப்படியாக எல்லா வகையிலும் குறைந்து கொண்டே வருவதை, கண்கூடாக நாம் காணவும் உணரவும் முடியும். அது மட்டுமின்றி ஆன்மீக வாழ்க்கையின் சாதனை என்பது, உயிரினுடைய தற்சுழற்சியையும் விரைவு இயக்க ஓட்டத்தையும் அடிப்படையாக கொண்டதே ஆகும்.
♻️ இன்றைய தற்சோதனை
♻️ ஆன்மீக வாழ்க்கை என்பதும் மனித வாழ்க்கை என்பதும் வேறு வேறு அல்ல இரண்டுமே ஒன்றுதான். உயிர் முழுமையாக இயங்கும் போது அதனால் இயக்கப்பட கூடிய மனமும் முழுமையாக இயங்கும். மனமுழுமை என்பது இறைநிலையை உணர்வதற்கான ஆதார இயக்க அமைப்பாகும். நாம் நமக்கு உள்ளும் புறமும் இருந்து தெரிந்து கொண்டு ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய அனுபவம் ஏராளமாக இருக்கிறது. அவைகள் யாவும் யாவர்க்கும் பொதுவாகும். இறைநிலையை எவர் வேண்டுமானாலும் அனுபவமாக பெறலாம், இதற்கான தேவையோ! முறையான அளவான முயற்சி.
♻️ இன்றைய பண்புப்பயிற்சி
♻️ மனதை மனதால் மட்டுமே உணர முடியும். அதுமட்டுமின்றி மனதை கொண்டு தான் உயிரையும் உணர்ந்து கொள்ள வேண்டும். இயற்கையினுடைய அமைப்பு இவ்வாறுதான் அமைக்கப்பட்டிருக்கிறது. உயிருக்கு வலிமையை அதிகரித்துக் கொண்டே மனதை உணர்வதும், உயிரை அறிவதும் என்ற இரு நிலை இயக்க அனுபவங்களையும், நாம் பெறுவதற்கு உடலை அதற்குரிய முறையில் தயார் படுத்த வேண்டும். இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதே உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை என்ற நான்குவித பயிற்சிகளையும் அடிப்படையாகக் கொண்ட வேதாத்திரியம் வாழ்க வளமுடன்...
♻️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
♻️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment