நித்தியக்கடன் அக்டோபர் 21 2023

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

அக்டோபர் 21


🔶🚥🔶🚥🔶🚥🔶🚥🔶🚥🔶


〽️ இன்றைய நித்தியக்கடன்


〽️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


〽️ இன்றைய சாதகம்


〽️ சனிக்கிழமை 

காலை:- சாந்தி தவம் 

மாலை:- நித்தியானந்ததவம்.


〽️ இன்றைய நற்சிந்தனை


〽️ "எளிமையான முறைப்படுத்தப்பட்ட உணவு" இதற்கும் இறை உணர்வுக்கும் என்ன தொடர்பு என்று சிலர் சிந்திக்கலாம். இறை தன்மையிலிருந்து நம்மை பிரித்து கடைகோடிநிலைக்கு கடத்திக் கொண்டு வந்திருக்கிறது இந்த முறையற்ற உணவு பழக்கம்... நாம் உண்ணக்கூடிய உணவு தான் ரசம், ரத்தம், சதை, கொழுப்பு, எழும்பு, மஜ்ஜை, ஜீவவித்து குழம்பு எனும் ஏழு தாதுக்களாக தன்மாற்றம் பெறுகிறது. நல்ல ஆரோக்கியமான உணவை உண்ணும்போது அது ஆரோக்கியமான தாதுக்களாக தன்மாற்றம் பெறும். உயிருக்கு பொருந்தாத உணவுகளை உட்கொண்டால் அது உடல் ஆரோக்கியத்தை சிதைத்துவிடும்.


〽️ இன்றைய தற்சோதனை


〽️ சமைத்த சைவ உணவும் சமைக்காத பச்சை காய்கறி பழங்கள் ஆகியவை உடலுக்கு ஆரோக்கியமான எளிமையான முறையான உயிருக்கு பொருத்தமான உணவாகும். உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவற்றை நாள் தவறாமல் செய்யும் போது உடல் செல்களுக்குள் வான்காந்தம் திணிவு பெற்று, தங்கி ஜீவகாந்தமாக தன்மாற்றம் பெறும். மேலும் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டு இறந்த செல்கள் நம் உடலிலிருந்து வெளியேறும். இந்த நிகழ்ச்சி சீராக நம் உடலுக்குள் இடைவிடாது நாள் தவறாமல் நடைபெறும் போது, படிப்படியாக நம்முடைய சிந்தனை செயல் அனைத்தும் ஆக்கத்துறையில் விழிப்பு நிலையோடு, இறை நிலையை நோக்கி உயரும்.


〽️ இன்றைய பண்புப்பயிற்சி


〽️ மனித வாழ்க்கை என்பது அறநெறியும் இறையுணர்வுமாகும். மூவகையான உடலையும் தயார்படுத்தி தகுதியை உயர்த்தவேண்டும். அது முறையான பயிற்சியாலும் முறையான உணவு பழக்கத்தாலும் மட்டும்தான் முடியும் "அதிகம் உறங்குபவர் அல்லது உறங்காமல் இருப்பவர் அதிகம் உண்பவர் அல்லது உண்ணாமலேயே இருப்பவர். இவர்களுக்கெல்லாம் இந்த குண்டலினி யோகம் சாத்தியம் கிடையாது" என்று கீதையில் ஒரு வாசகம் உண்டு. இது முற்றிலும் உண்மையே. ஆறாவது அறிவில் முழுமை பெறுவோம் முன் ஜென்ம வினையை, நிறைந்த ஜீவகாந்த சக்தியோடு எதிர்கொள்வோம். வாழ்க வளமுடன்... 


〽️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


〽️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments