நித்தியகடன் டிசம்பர் 21 2021

🏮🔶🏮🔶🏮🔶🏮🔶🏮🔶🏮

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 21*

🏮🔶🏮🔶🏮🔶🏮🔶🏮🔶🏮

👁️‍🗨️ *இன்றைய நித்தியகடன்*

👁️‍🗨️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.

👁️‍🗨️ *இன்றைய சாதகம்*

👁️‍🗨️ செவ்வாய்கிழமை 
காலை:- துரியாதீததவம், மாலை:- இறைநிலை தவம்.
 
👁️‍🗨️ *இன்றைய நற்சிந்தனை*

👁️‍🗨️ ரகசிய குறியீடு (password) இது இல்லாமல் இதனை பயன்படுத்தாமல் நாம் கணினியில் எந்த ஒரு வலைதளங்களுக்கும் செல் முடியாது தனிமனித பாதுகாப்பு கருதி இது பயன்பாட்டில் இணைக்க பட்டதாகும் இதேபோன்று ஆன்மிக வாழ்க்கையிலும் பயணத்திலும் ஒரு தளத்தை விட்டு அடுத்த தளம் செல்லும்போது அங்கே ரகசிய குறியீடு தேவைப்படுகிறது நம்முடைய கருமைய அமைப்பு படலம் படலமாக அமைந்திருக்கிறது ஒரு படத்தில் இருந்து மற்றொரு படலத்திற்கு பயணம் செய்வது ஏற்படுவது தான் அனுபவமாகும்.

👁️‍🗨️ *இன்றைய தற்சோதனை*

👁️‍🗨️ இந்த அனுபவத்திற்கு ஆங்காங்கே அவரவர் அனுபவத்தை பெற்ற பயன்படுத்திய விதத்திற்கும் முறைக்கும் ஏற்றார்போல் இறைவனாலேயே தகுதிச் சான்றிதழ் வழங்கப்படுகிறது அதற்குப் பெயர்தான் ஞானம் உங்கள் ரகசிய குறியீடுடானது நீங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளை எந்த முறையில் கையாள்கிறீர்களோ அதை பொறுத்தே அமைகிறது, இயற்கை பல்வேறு உருவங்களில் இந்த பூமியில் வாழ்ந்து செய்த செயல் பதிவுகள் அனைத்தும் நம்முடைய கருமையத்தில் சஞ்சித கருமங்களாக இருக்கின்றது என்பதை நாம் நன்கு அறிவோம்.

👁️‍🗨️ *இன்றைய பண்புப்பயிற்சி*

👁️‍🗨️ இந்த பதிவுகளின் நல்வினை பதிவும் உண்டு தீவினை பதிவும் உண்டு நல்வினை பதிவுகளை அதிகரிக்கும் செயல்களில் நம்மை மன ஆர்வத்தோடு எப்போதும் ஈடுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும் எந்தவிதமான பற்றுதலும் ஒற்றுதலுமில்லாமல் செயலில் நம்மை இணைத்துக் கொள்ளும் போது கருமையத்தின் தீவினை பதிவுகள் தளர்வு அடையும் இது தளர்வு பெறாமல் அவருடைய உள்ளுணர்வு பயணம் துவங்குவதற்கு வாய்ப்பு இல்லை மேலும் உடற்பயிற்சி காயகல்பம் தவம் தற்சோதனை இவை நான்கும் கருமத்திலுள்ள தீவினை பதிவை தளர்த்தும் விதத்திலேயே அமைக்கப் பட்டிருக்கிறது. தரத்தில் உயர்வோம் தன்னிலை விளக்கம் பெறுவோம். வாழ்க வளமுடன்...

👁️‍🗨️ *இன்றைய மூலிகை*

👁️‍🗨️ *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

👁️‍🗨️ இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

👁️‍🗨️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

👁️‍🗨️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

👁️‍🗨️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

👁️‍🗨️ *நாளையும் தொடரும் மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments