❄️⛳❄️⛳❄️⛳❄️⛳❄️⛳❄️
*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மே 13*
❄️⛳❄️⛳❄️⛳❄️⛳❄️⛳❄️
🍒 *இன்றைய நித்தியகடன்*
🍒 அதிகாலை எழுந்து நிதானமாக, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍒 *இன்றைய சாதகம்*
🍒 வியாழக்கிழமை
காலை:- துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🍒 *இன்றைய நற் சிந்தனை*
🍒 பருவுடல், நுண்ணுடல், காந்த உடல் இந்த மூன்று உடல்களின் சரியான புரிதலோடு பயிற்சியை நாள் தவறாமல் செய்யும்போதுதான், வேதாத்திரியத்தின் உண்மையான விஞ்ஞானம் வாழ்க்கையாக மலரும். இந்த வாழ்க்கை விஞ்ஞானத்தை இந்த மூன்று உடல்களின் அடிப்படையில் இந்த பயிற்சிகள் எவ்வாறு இறை நீதியோடு இயங்குகிறது, என்ற புரிதலோடு செயல் புரிந்து வாழும்போதுதான் அனைத்து இயக்க அமைப்புகளும், நம் அறிவில் தெளிவாக விளங்கும்.
🍒 *இன்றைய தற்சோதனை*
🍒 பல்வேறு விதமான கோட்பாடுகளை உள்ளடக்கமாக கொண்டது வேதாத்திரியம். இதனை சரிவர புரிந்து கொள்ளாமல், அதனுடைய விஞ்ஞானத்தை உணர்ந்து கொள்ளாமல், உடலை அசைப்பதோ, மனதை அசைகாமல் வைத்திருக்க முயற்சிப்பதோ, உயிரோடு இணைந்து வாழ எண்ணுவதோ விழிப்பு நிலை ஆகாது. இதனுடைய விஞ்ஞானத்தையும், கோட்பாட்டினையும் எல்லா வகையிலும் தற்சோதனை செய்து விரிவாகவும், தெளிவாகவும் விளங்கிக் கொள்ளுங்கள்.
🍒 *இன்றைய பண்புப் பயிற்சி*
🍒 மனித உடல் முழுவதும் அனுக்களால் ஆக்கப்பட்டது. நம்முடைய உடலுக்குள் நடைபெறக்கூடிய நிகழ்ச்சி இதுதான். ஒன்று அணுச்சேர்க்கை, மற்றொன்று அணுச்சிதைவு. இந்த நிகழ்ச்சிகள் எதனால் நடைபெறுகிறது, இதனுடைய கோட்பாடு என்ன? என்பதை புரிந்துகொண்டு விட்டால், அனு சேர்க்கையை ஏற்படுத்திக் கொள்ளவும் முடியும், அணுச்சிதைவு தடுக்கவும் முடியும். இதற்கு தேவையானதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் நாம் செய்யும் பயிற்சி மீதும், குருவின் மீதும் நம்பிக்கை. இந்த நம்பிக்கைக்குள் உங்களை ஆழமாக புதைத்துக் கொள்ளுங்கள். இந்த பண்பு இறை நிலை வரை அனைத்தையும் விரிவாகவும், தெளிவாகவும், உணர்த்தும். வாழ்க வளமுடன்...
🍒 *இன்றைய மூலிகை*
🍒 *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.
🍒 அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும்.
🍒 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*
🍒 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*
🍒 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*
🍒 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
*🌸வாழ்க வையகம்🌸*
*🍁வளர்க வேதாத்திரியம்🍁*
*🌸வாழ்க வளமுடன்🌸*
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment