நித்தியகடன் மார்ச் 12 2021

👣🔥👣🔥👣🔥👣🔥👣🔥👣

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*மார்ச் 12*

👣🔥👣🔥👣🔥👣🔥👣🔥👣

💯 *இன்றைய நித்தியகடன்*

💯 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

💯 *இன்றைய சாதகம்*

💯 வெள்ளிகிழமை 
காலை, மாலை இரண்டு 
வேளையும் சாந்தி தவம்.

💯 *இன்றைய நற்சிந்தனை*

💯 சமுதாயம் ஒரு நாளும் வன்முறையை ஏற்றுக்கொள்வதே இல்லை. வன்முறை நடைபெறும் பகுதியில் பொருளிழப்பும், உயிரிழப்பும் ஏற்படுகிறது. மேலும் பொருள் தேவையும் அதிகரிக்கிறது. இயல்பான வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. பல்வேறு வகையில் சிக்கல்கள் துன்பங்கள் ஏற்படுகின்றன. இது தேவையா சிந்திப்போம் மேலும் இந்த வன்முறை என்பது நம் உடலுக்குள்ளாகவும் நடைபெறுகிறது. அளவுமுறை மீறி உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இவைகளை கையாளும் போது அதற்குப் பெயரும் வன்முறைதான். வன்முறையின் விளைவுகள் மனதிலும், உடலிலும் பெரிய துன்பமாகவும் வாழ்க்கைச் சிக்கல்களாகவும் இருக்கிறது.

💯 *இன்றைய தற்சோதனை*

💯 எந்த ஒரு காலகட்டத்திலும், எதற்காகவும் வன்முறையை ஆதரிக்காதீர்கள். உங்களுடைய இந்த சரீரம் என்பது ஞான சரீரமாகும். அமைதியோடு இணக்கத் தன்மையோடு, அன்போடு உங்கள் செயல்களை, பழக்கவழக்கங்களை சீரமைத்துக் கொள்ளுங்கள். உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இந்த ஐந்தின் வழியாகவும் வன்முறையை ஒரு நாளும், ஒரு பொழுதும் ஆதரிக்காதீர்கள். தற்சோதனைக்கு உங்களை நீங்களே அர்ப்பணித்துக் கொண்டு முயன்று, உங்களை நீங்களே வழி நடத்துங்கள்.

💯 *இன்றைய பண்புப்பயிற்சி*

💯 வன்முறை இல்லாத வாழ்க்கை முறையை வாழ்வோம் உங்களுடைய உடலுக்கும், கருமையத்திற்கும் பொருத்தமில்லாதவைகளை விட்டுக்கொடுங்கள், தியாகம் செய்யுங்கள், சகித்துக் கொள்ளுங்கள், இதுவே ஆன்மீக பண்பாகும், அகிம்சை உணர்வாகும். இந்தப் பண்பில் வாழும்போதுதான் வாழ்க்கையும் நம்மோடு செர்ந்து கொண்டு வாழ்கிறது. "வாழ்க்கையாக இருப்பது சுத்தவெளி, இறைவன், தெய்வமே ஆகும்" வாழ்க வளமுடன்...

💯 *இன்றைய மூலிகை*

💯 *நிலவேம்பு குடிநீர்* தேவையான பொருள் தண்ணீர் -200ml நலவேம்பு ஒரு டேபில் ஸ்பூன்.

💯 செய்முறை:- நிலவேம்பு ஒரு டேபில் ஸ்பூனை. 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் 100ml ஆகும் அளவிற்கு கொதிக்க விடவும்.

💯 *முக்கிய குறிப்பு:-* காலையில் தயாரித்து. காலை வெறும்
வயிற்றில் பருகவும். மூன்று வயது குழந்தைகளுக்கு 50ml பெரியவர்களுக்கு 100ml
நோய் எதிர்புசக்தி அதிகரிக்கும்.
(வைரஸ் காய்ச்சல் குணமாகும்)

💯 *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

💯 *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

💯 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

💯 *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments