நித்தியகடன் டிசம்பர் 12 2020

🔘🍥🔘🍥🔘🍥🔘🍥🔘🍥🔘

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*டிசம்பர் 12*

🔘🍥🔘🍥🔘🍥🔘🍥🔘🍥🔘

♨️ *இன்றைய நித்தியகடன்*

♨️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

♨️ *இன்றைய சாதகம்*

♨️ சனிக்கிழமை 
காலை:- சாந்தி தவம் 
மாலை:- நித்தியானந்ததவம்.

♨️ *இன்றைய நற்சிந்தனை*

♨️ முயற்சிக்கு நீங்கள் தான் முன்னுதாரணம் என்று, இந்த உலகிற்கு உங்களை நீங்கள் விசாலமாக அறிமுகப் 
படுத்திக்கொள்ளுங்கள். மனிதர்களுக்கு முன்னும் பின்னும் நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. இறைநிலையின் தன்மாற்றச்சரித்திரத்தில் மனிதன் மிகச்சிறந்த தன்மாற்றமாகும். மனதிற்கு மனம் உண்மை என்பது வேறுபடுகிறது, மாறுபடுகிறது. அவரவர்களுடைய அனுபவ அறிவைப் பொறுத்து இவ்வாறு அமைகின்றது.

♨️ *இன்றைய தற்சோதனை*

♨️ கலப்படமில்லாமல் உங்களுடைய அனுபவத்தை தெள்ளத்தெளிவாக உயர்த்திக் கொள்ளும் முயற்சி மிகவும் சாலச் சிறந்ததாகும். விடியும் என்று விண்ணை நம்புங்கள், முடியும் என்று உங்களை நம்புங்கள். இது துவக்கத்துக்கும் முடிவுக்குமான வாழ்க்கைப் பயணம். நாம் ஒன்றும் சிறு வாக்கியம் அல்ல, நீண்ட நெடிய வரலாற்றுக் காப்பியம். மனிதனுக்குள் அடங்கியிருக்கும் அளவிட முடியாத சக்தியை வகைப்படுத்தி, முறை படுத்திக்கொண்டால் விரிவடையும் "பிரம்மஞானம்".

♨️ *இன்றைய பண்புப்பயிற்சி*

♨️ அது அதனை அது அதுவாய் உணரக்கூடிய பண்பில் மனிதர்கள் நாளுக்கு நாள் மேலோங்க வேண்டும். இயற்கையின் உண்மைகளை கலப்படமில்லாமல் மயக்கமில்லாமல், தெள்ளத்தெளிவாக உள்ளதை உள்ளவாறு உணர்ந்து வாழ்க்கையில் அனுபவமாக்கிக் கொள்ளலாம். இறைநிலையின் தான்மாற்றச்சரித்திரமும் மனிதனுடைய வரலாறும் அவர்களுடைய சொந்தக் கதை ஆகும். நம்முடைய சரித்திர உண்மைகளை வரலாற்று நிகழ்வுகளை புரட்டிப் பார்க்க தயாராவோம். வாழ்க வளமுடன்...

♨️ *இன்றைய மூலிகை*

♨️ *சீரகம்* இரண்டுடம்லர் தண்ணீரில் ஒரு சிட்டிகை சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆனதும் குடிக்கவும்.

♨️ இது இரத்தவிருத்தி மற்றும் இரத்த சுத்திகரிப்பு செய்யும், ஆழ்ந்த உறக்கம் வரும். இளநரை, கண், வயிறு எரிவு நீங்கும். வாய் துர்நாற்றம், பற்சிதைவு நீங்கும். ரத்த மூலம், வயிற்று வலி, இருமல், விக்கல் போகும். பித்தம் அகலும், அஜீரணம், மந்தம் நீங்கும். 

♨️ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

♨️ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

♨️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

♨️ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments