நித்தியகடன் நவம்பர் 05 2020

💢🏀💢🏀💢🏀💢🏀💢🏀💢

*வாழ்க வையகம்*
*வளர்க வேதாத்திரியம்*
*வாழ்க வளமுடன்*
*நித்தியகடன்*
*நவம்பர் 05*

💢🏀💢🏀💢🏀💢🏀💢🏀💢

♋ *இன்றைய நித்தியகடன்*

♋ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், அந்நாள் இனிய நாளாக.

♋ *இன்றைய சாதகம்*

♋ வியாழக்கிழமை 
காலை:- துரியதவம், 
மாலை:- இறைநிலைதவம்.

♋ *இன்றைய நற்சிந்தனை*

♋ "பலவாறான நினைவகற்றி பார்க்க உன்னுள் ஆழ்ந்து விட்டேன்" வேதாத்திரி மகரிஷியினுடைய இந்த வார்த்தை நமக்கு அனுபவமாக நிச்சயமாக கிட்டும். அதற்கு நாம் நம்மை பலவகையிலும் முறையிலும் தயார்படுத்த வேண்டும். தியானம் செய்து கொண்டே தயாராகவேண்டும், உடற்பயிற்சி செய்து கொண்டே தயாராகவேண்டும், காயகல்பம் செய்து கொண்டே தயாராகவேண்டும், தற்சோதனை செய்து கொண்டே தயாராக வேண்டும். எந்தெந்த வாய்ப்புகள் எல்லாம் இருக்கின்றதோ அத்தனை வாய்ப்புகளையும் துல்லியமாக பயன்படுத்தி தயாராக வேண்டும்.

♋ *இன்றைய தற்சோதனை*

♋ உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இந்த ஐந்தின் வழியாகவும் நம்மை தயார்படுத்தியாகவேண்டும். இவைகளில் நாம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய முறைதான் ஞானத்தை நமக்குள் முளைக்கச் செய்யும். ஞானம் நமக்குள் விதையாக உயிரில் அடக்கமாக இருக்கிறது. அதனை வளர்ப்பதற்கு போதிய வளம் உடலிலும், உயிரிலும், மனதிலும் தயாராகவேண்டும். ஒரு நிலத்தை செம்மைப் படுத்துவது போல நாம் உடலால், உயிரால், மனதால் ஞானத்தை வளர்க்க தயாராக வேண்டும்.

♋ *இன்றைய பண்புப்பயிற்சி*

♋ பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட இந்த வாழ்க்கையை ஏன் பிறந்தோம்? எதற்காக பிறந்தோம்? நம்முடைய வாழ்க்கை என்னுடைய நோக்கம் என்ன? என்பதை தெரிந்து கொண்டு அதற்கு தக்கவாறு நம்முடைய தேவைகளை முறைப்படுத்திக் கொண்டு, முறை தவறிய பழக்கவழக்கங்களை எல்லாம் படிப்படியாக குறைத்து சிந்தனை, சிக்கனம், சீர்திருத்தம் என்ற முறையில் சிறப்பாக உயர்ந்து ஓங்கி வாழ வேண்டும். நாமும் நம் குடும்பமும் வாழ்க வளமுடன்...

♋ *இன்றைய மூலிகை*

♋ *கொத்தமல்லி* ஒரு கைப்பிடி கொத்துமல்லி, ஒரு கைப்பிடி தேங்காய் துருவல், பசும்பால் கால் டம்ளர் (காய்ச்சி ஆற வைத்தது) இரண்டு டீஸ்பூன் பனைவெல்லம், ஒரு ஏலக்காய் சேர்த்து அரைத்து ஒரு டம்ளர் அளவு குடிக்கவும்.

♋ அஜீரணம், பித்தம், இளநரை மறையும். இதய பலவீனம், மிகுந்த தாகம், நாவறட்சி, மயக்கம், வயிற்றுப் போக்கு, வாந்தி, தலைச் சுற்றல், நெஞ்செரிவு, எச்சில் அதிகமாக சுரத்தல், சுவையின்மை ஆகியவை நீங்கும். 

♋ *ஆகாம்ய கர்மம் எனும் புகுவினை மீது கவனம் வைப்போம் புகை, போதை, மது, மாமிசமும் வேண்டாம். இதனை தவிர்த்து பழக துரிய தவம் உதவும். இளைஞர்களுக்கு வேண்டுகோள் புகை, போதை, மது, மாது, சூது, வஞ்சம், இலஞ்சம் தவிர். இதற்கு மனவளக்கலை மன்றபயிற்சிகள் உதவும்.*

♋ *குறிப்பு:- இந்நித்தியகடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*

♋ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம்*

♋ *மேலும் விபரங்களுக்கு*
Vethathiriyam for world peace
www.vethathiri.edu.in
https://facebook.com/skyyogatv

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

          *🌸வாழ்க வையகம்🌸*
    *🍁வளர்க வேதாத்திரியம்🍁*
          *🌸வாழ்க வளமுடன்🌸*

☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments